சிவில் பணிகள்
5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு
வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அனுராதபுரம் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 17 ஆம் திகதி தந்திரிமலை விகாரையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இரத்த தான நிகழ்ச்சியை நடாத்தினர்.
141 வது காலாட் பிரிகேட்டில் இரத்த தான நிகழ்வு
மறைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 141 வது காலாட் பிரிகேட் படையினரால் அதன் கீழ் உள்ள படையலகுகள் மற்றும், ராகம போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 17, அன்று படையணி வளாகத்தில் இரத்த தான நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இரசாயன கசிவை தடுக்க 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படை குழு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினால் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய இரசாயன கசிவை நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு இரசாயன படை அனுப்பிவைக்கப்பட்டது. இரசாயன ஆயுத மரபுகளுக்கான தேசிய அதிகார சபையின் (NACWC) தொழில்நுட்ப ஆதரவுடன், 2025 ஜூன் 16 அன்று கொழும்பு தீயணைப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 'தூய இலங்கை' திட்டத்திற்கு ஆதரவு
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு ஆதரவாக, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜூன் 15 ஆம் திகதி சிப்பியாறு புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
513 வது காலாட் பிரிகேட்டில் இரத்த தான நிகழ்வு
513 வது காலாட் பிரிகேட் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 09 அன்று கருகம்பனை கலாசார மண்டபத்தில் இரத்த தான திட்டத்தை முன்னெடுத்தனர்.
1 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு
1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
ஹங்வெல்ல ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு
ஹங்வெல்ல, கலுஅக்கலவில் வசிக்கும் தேவையுடைய ஒருவருக்கு 2025 ஜூன் 11, அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது. திரு. எஸ்.ஏ. இஷான் பெரேராவின் நிதியுதவி மூலம் கட்டுமானம் சாத்தியமானதுடன் 1 வது புலனாய்வுப் இலங்கை கவச வாகன படையணியின் படையினர் இந்தத் திட்டத்திற்கு பணியாளர் உதவியை வழங்கினர்.
9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினால் இரத்த தான முகாம் ஏற்பாடு
9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, குருநாகல் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 08 ஆம் திகதி ஹெரலியாவலை.
பெலிஹுலோயா பேக்கர்ஸ் வளைவுக்கு அருகில் ஐந்து நபர்கள் கெமுனு ஹேவா படையினரால் மீட்பு
2025 ஜூன் 10 ஆம் திகதி பெலிஹுலோயா நன்பெரியால் வீதியில் பேக்கர்ஸ் வளைவுக்கு அருகில் செங்குத்தான சரிவில் விழுந்த ஐந்து நபர்களை 11 வது கெமுனு ஹேவா படையலகின் படையினர் மற்றும் கெமுனு ஹேவா படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் கூரகலவில் ஏற்பட்ட காட்டுத்தீ அணைப்பு
2025 ஜூன் 10 ஆம் திகதி கூரகல பிரிதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் துரிதமாக செயல்பட்டனர். தீயை கட்டுப்படுத்தவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் படையினர் செயற்பட்டனர்.