இலங்கை இராணுவத்தினருக்கு வெடிக்கட்டளை அகற்றும் பயிற்சிகள்
22nd December 2019
கஹாதூ மாலைதீவிலுள்ள லாமு அடோல் தேசிய பாதுகாப்பு படை தலைமையகத்தின் அழைப்பையேற்று இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களினால் வெடிக்கும் சாதன அகற்றல் பயிற்சி பாடநெறியானது இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பமானது.
மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகம் பல்வேறுபட்ட சேவை பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று அதிகாரிகள் மற்றும் முப்பத்திரண்டு படை வீரர்களை உள்ளடக்கிய 35 பேர் இந்த வெடிக்கும் கட்டளை அகற்றுதல் (ஈஓடி) மற்றும் மேம்பட்ட வெடிக்கும் சாதன அகற்றல் (ஐஇடிடி) செயற்படுத்தும், பத்து வார கால விரிவான பயிற்சிகள் தொகுதி ஒரு சமநிலைக்கு வந்தது.
EOD மற்றும் IEDD செயற்பாட்டர்களின் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த பாடநெறி மேற்கொள்ளப்பட்டன. இது சுயாதீன IEDD மற்றும் EOD செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகிறது. கடலோர காவல்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் அப்துல்லா ஷாஹித் 82 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று இந்த பயிற்சி பாடநெறியில் சிறந்து விளங்கினார்.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மத்திய பகுதியின் கட்டளை தளபதி கேர்ணல் முகமட்ட சரீப் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
இவர் இங்கு வந்து உரையாற்றும் போது, இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினரால் வழங்கப்பட்ட இந்த பயிற்சிக்கு இலங்கை இராணுவத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து இலங்கை இராணுவ தளபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவ பொறியியல் படையணியினால் வழங்கப்பட்ட இந்த பயிற்சி நிறைவு நிகழ்வின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
BIEDDT, அடிப்படை பாடநெறி முடிந்ததும், ஏழு வார கால மேம்பட்ட பாடநெறி மேலும் 24 இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளன. இந்த பயிற்சிகள் இலங்கை இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் சந்தன விக்கிரமநாயக அவர்களது தலைமையில் பத்து பேர் கொண்ட இலங்கை இராணுவ பயிற்றுநர்களின் பங்களிப்புடன் இடம்பெறும்.
EOD மற்றும் IEDD உறுப்பினர்களின் சுயாதீனமான குழுவாகவும், குழு தளபதிகளாகவும் ஆற்றிய பயிற்சிகள் மிகவும் செயல்திறனாகவும் பாராட்டத்தக்க விடயமாக அமைந்திருந்தது.
இந்த பயிற்சிகளை மாலைதீவு தலைமையகத்தைச் சேர்ந்த கேர்ணல் அகமட் சாரிப் மற்றும் கெப்டன் இப்ராஹிம் ஷாகிட் அவர்கள் பார்வையிட்டனர். |