இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் நத்தார் கரோல் கீத நிகழ்ச்சி

13th December 2024

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொலிஸ் பாடசாலை மற்றும் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இணைந்து கிரித்தலே இலங்கை இராணுவ பொலிஸ் பாடசாலையில் 7 டிசம்பர் 2024 அன்று நத்தார் கரோல் கீத நிகழ்ச்சியை நடாத்தியது.

இந்நிகழ்வில் இனாமலுவ புனித அந்தோனியார் தேவாலயத்தின் கரோல் குழுவினர் பாடல்களை பாடினர். பண்டிகையின் உற்சாகத்தை அதிகரிக்க, நத்தார் பரிசுகள், சிற்றுண்டிகள் மற்றும் மதிய உணவை இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினரின் பிள்ளைகளுக்கு நத்தார் தாத்தா வழங்கினார்.

பொது பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்எஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.