யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் வழங்கல் தளபதி 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம்

1st November 2024

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 29 ஒக்டோபர் 2024 அன்று 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.டி.சி சிறிவர்தன பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

பின்னர், வழங்கல் தளபதி கட்டளை அதிகாரியிடமிருந்து படையலகின் பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பெற்றதுடன், படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.