50 இளைஞர்கள் யுவதிகள் ஓய்வூதிய அடிப்படையில் இராணுவ சேவையில் இணைப்பதற்கு முடிவு

18th February 2018

வேலையற்றிருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகர்களான 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புணர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது மேற்பார்வையில் இந்த புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் இணைக்கப்பட்டார்.

இந்த போராளிகளுக்கு மாதாந்தம் 40.000/= ரூபாய் சம்பளமும் மருத்துவ வசதிகளும் 55 வயதின் பின்பு ஓய்வூதியம் வழங்குவதற்கான வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் யாழ் பலாலியிலுள்ள இராணுவ பண்ணைகளில் தென்னை மரங்களை பராமரிப்பதற்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற இளைஞர் யுவதிகள் 8 மணித்தியாலயம் ஒரு நாளிற்கு சேவையில் ஈடுபட வேண்டும் எனும் நிபந்தனைகளுக்கமைய இவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது சொந்த எதிர்காலத்தை கவனித்துக் கொள்வதன் மூலம் ஒரு குடும்பத்தாரை போலவே ஒரு நாட்டில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

|