75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகையில் இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசிர்வாதம்
28th September 2024
நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இரண்டாவது பௌத்த சமய நிகழ்வு இன்று (28) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது. மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
மரபுகளுக்கு இணங்க, இராணுவ கொடி, இராணுவத் தொண்டர் படையணி கொடி, அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகம் கொடிகள், அனைத்து முன்னரங்கு பராமரிப்புப் பகுதி கொடிகள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், மற்றும் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் பல வண்ண இராணுவ கொடிகள் மரியாதையுடன் மேல் அறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இராணுவத் தளபதியின் தலைமையில் ஒவ்வொரு அமைப்பினதும் பிரதிநிதி அதிகாரிகள் / அதிகாரவாணையற்ற அதிகாரிகளால் ஸ்ரீ தலதா மாளிகையின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆசீர்வாதம் பெறப்பட்டது.
இராணுவத் தளபதி இலங்கை இராணுவக் கொடியை ஊர்வலத்தின் முன்பாக ஏந்திச் சென்றதுடன், கொடிகள் அனைத்தும் சன்னிதி 'தேவாவ' பொறுப்பு தேரருக்கு வழங்கப்பட்டன. அங்கு ‘செத்பிரித்’ பாராயணங்கள் மற்றும் மத அனுஷ்டானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான இராணுவத்தின் நீண்ட பயணத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கின.
மத அனுஷ்டானங்களின் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள் கொடிகளை மீளப் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் கையளித்தனர். இராணுவத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் வணக்கத்திற்குரிய இந்த புனித தலத்தின் அபிவிருத்திக்காக தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க தெல பண்டார அவர்களிடம் இராணுவத் தளபதி நிதி நன்கொடையை வழங்கினார்.
இராணுவ தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பௌத்த பிக்குகளுக்கு (சங்கீக தானம்) அன்னதானம் வழங்குவதிலும் கீழ் அறையில் 'புத்த பூஜை' வழங்குவதிலும் கலந்துகொண்டார்.
அஸ்கிரிய பீடத்தின் வண. ஆனமடுவே ஸ்ரீ தம்மாதஸ்ஸி தேரர் சொற்பொழிவு நிகழ்த்தியதுடன், தேசத்தின் நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் 75 ஆண்டுகால சேவைகளை பாராட்டினார்.
இராணுவத் தளபதி மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மரியாதைக்குரிய மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பரிஸ்கரா' வழங்கியதுடன் கண்டி சமய நிகழ்வுகள் நிறைவிற்கு வந்தன.
இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், பணிப்பகத்தின் பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.