பெல்லன்வில ரஜமஹா விகாரையில் 74வது எசல மகா பெரஹெர விழாவை முன்னிட்டு சிரமதான பணி
10th August 2024
142 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மைதான விஸ்தரிப்பு பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான சிரமதான பணி 24 ஜூலை 2024 ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 6 வரை பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இம் முயற்சி 74 வது எசல மகா பெரஹெரா திருவிழாவிற்கு தயாராகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.