இராணுவத் தளபதியை சந்தித்த இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானி
14th December 2017
இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானியான ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் வைஎஸ்எம் விஎம் ஏடீசி அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை திங்கட் கிழமை (11) காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இவ்வாறு வருகை தந்த இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானியவர்களை இராணுவப் பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார்.
இதன் போது இலங்கை இராணுவ சிங்கப் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு இந்திய ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா அவர்கள் வரவேற்கப்பட்டார்.
இவ்வாறு வருகை தந்த இந்திய ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா அவர்கள் மற்றும் பல இராணுவ அதிகாரிகளுடன் வரவேற்கப்பட்டு அறிமுகமானார்.
இதன் போது இவ்விருவருக்கும் இடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது தமது சேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்திய விமானப் படையின் இரு அதிகாரிகளும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் ஏயார் சீப் மார்சல் அவர்களால் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது. பின்னர் ஏயார் சீப் மார்சல் அவர்கள் விடை பெற்றார்.
|