தென் கொரியாவின் குடியுரிமை பாதுகாப்பு இணைப்பு அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

15th November 2017

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை தென் கொரியா குடியரசின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் இன்லீ அவர்கள் இன்றைய தினம் (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு இராணுவ தளபதியின் பணிமனையில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக் இடையிலான முக்கிய விடயங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இவ்விருவருக்கும் இடையில் ஞாபக சின்னங்கள் பரிமாறப்பட்டது.

|