மேலும் 342 பேருக்கு கொவிட் – 19 தொற்று உறுதி

10th March 2021

இன்று (11) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 342 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 42பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 300பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 62 பேர் கம்பஹா மாவட்டத்திலும் , 39பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் , 34பேர் கொழும்பு மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 165பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (11) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 86,684 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 82,857 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 83,209 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 2,960 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 457பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றினால் 04மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணித்தவர்கள் கொழும்பு 09, அளவத்துகொட,கொழும்பு 14, மற்றும் நுகேகொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (11) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 515ஆகும்.

மேலும், (11) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 106தனிமைப்படுத்தல் மையங்களில் 10,650 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (10) 7,889 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |