மேலும் இரு வெளிநாட்டவர்களுக்கு தொற்று உறுதி
31st December 2020
இன்று (01) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 597 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 03 பேரும் வெளிநாட்டவர்கள் இருவரும் ஆவர். மற்றைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 256 பேர் கொழும்பு மாவட்டம், 63 பேர் மட்டகளப்பு மாவட்டம் 62 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 211 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
இன்று (01) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,549 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 32,571 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 36,490
அதன் பிரகாரம் (01) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,298 ஆகும். அவர்களில் 35,328 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (01) ஆம் திகதி வரை 7,766 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (01) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 706 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (01) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் தர்கா நகர், கலேவலை, பெல்மடுள்ள , கொழும்பு 05 மற்றும் ஹோமாகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அந்த வகையில் இன்று காலை (01) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 204 ஆகும்.
இன்று (01) கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 30 பயணிகளும் மாலைதீவுகளில் இருந்து Q26944 விமான ஊடாக 35 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 605 விமானம் ஊடாக 290 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானம் ஊடாக சில பயணிகளும் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (01) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 77 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,243 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (31) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12,592 ஆகும். |