கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேலும் 210 பேர் இலங்கை வருகை

15th December 2020

இன்று (15) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 688 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 03 பேர் வெளிநாட்டு பாதுகாவர்கள் ஏனைய அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 200 பேர் கொழும்பு மாவட்டம், 117 பேர் களுத்துறை மாவட்டம், 113 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 225 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.

இன்று (15) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,833 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 20,901 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 26,774

அதன் பிரகாரம் (14) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,477 ஆகும். அவர்களில் 24,308 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (14) ஆம் திகதி வரை 9,015 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (15) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 516 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (15) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் பண்டாரகம மற்றும் கொழும்பு 14 சேர்ந்தவர்கள் அந்த வகையில் இன்றுவரை (15) கொவிட் மரணங்கள் எண்ணிக்கை 154 ஆகும்.

இன்று (15) காலை கனடாவில் இருந்து EY 264 விமான ஊடாக 130 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமான ஊடாக 80 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (15) ஜேர்மனியில் இருந்து UL 554 விமானம் ஊடாக 30 பயணிகளும் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இருந்து UL 504 விமான ஊடாக 48 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமான ஊடாக 74 பயணிகளும் நேபாளத்தில் இருந்து UL 182 விமானம் ஊடாக 23 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (15) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,813 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று டிசம்பர் (14) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,479 ஆகும். |