கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து பாதிக்கப்பட்ட 11 கைதிகள் இன்னும் சிகிச்சையில் கோவிட் மையம் தெரிவிப்பு
14th September 2020
இன்று காலை (14) ஆம் திகதி நிலவரப்படி, மேலும் 39 நபர்கள் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் ஆவர். மாலைதீவிலிருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (12) பேரும், கத்தாரிலிருந்து (16) பேரும், குவைத்திலிருந்து (6) பேரும், எத்தியோப்பியாவிலிருந்த ஒருவரும், உக்ரைனிலிருந்து ஒருவரும் தனிமைப்படுத்தல் மையங்களான விடுதபளை, மாரவிலை க்ளப் பாம், அநுராதபுரம் வாசல லெஷர், வெ ள்ளவத்தை ஓஷோ ஹோட்டல், நுவரெலியா ரெட் அராலிய ஹோட்டல், முல்லைத்தீவு, ரன்டெம்பே, நுவரெலியா அராலிய கிரீன் ஹோட்டல், கந்தகாடு,போஹொட, இரனைமடு, கோகாளை ரிசோட், டொல்பின் ஹோட்டல், ராமடா ஹோட்டல், கடுநாயக மற்றும் நிபுன பூசா மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று கோவிட் மையம் தெரிவித்தது.
இன்று (12) காலை 6.00 மணி வரை கந்தக்காடு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 649 ஆகும். அவர்கள் 528 நபர்கள் மறுவாழ் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் ஆவர்.
டுபாயிலிருந்து EK 648 விமானத்தில் 26 பயணிகளும், டோகார் கட்டாரிலிருந்து QR 668 விமானத்தில் 64 பயணிகளும், இந்தியாவிலிருந்து 6E 9034 விமானத்தில் 6 பயணிகளும், ஜப்பானிலிருந்து UL 455 விமானத்தில் 295 பயணிகளும் இன்று காலை வருகை தந்துள்ளனர் இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் தனிமைப்படுத்தலிலிருந்த 159 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான.
ருவல்ல கல்பிடியிலிருந்து ஒருவரும், பிடிபன இராணுவ பொதுசேவை படையணி முகாமலிருந்த 40 பேரும், ஜெட்விங் பீச் ஹோட்டலிலிருந்த 15 பேரும், தியதலைவையிலிருந்த 07 நபர்களும், அநுராதபுர வாசல ஹோட்டலிலிருந்து 15 நபர்களும், பாசிக்குடாவிலிருந்து 05 நபர்களும், பனிச்சாங்கேனியிலிருந்து 03 நபர்களும், அமாஜி ஆரியா ஹோட்டலிலிருந்து 52 பேரும், நீர்கொழும்பு மற்றும் முல்லைத்தீவிலிருந்து 21 நபர்களும் வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினம் வரையான காலப்பகுதியில் 40,965 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அத்துடன் முப்படையினால் நிருவகித்து வரும் 60 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,960 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (13) ஆம் திகதி நாடாளவியல் ரீதியாக மேற்கொண்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 1890 ஆகும். இதுவரைக்கும் நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 253,842 ஆகும்.
இதற்கிடையில், முழு குணமடைந்த பின்னர் 13 நேர்மறை COVID-19 வழக்குகள் இன்று (14) அதிகாலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறின. அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அதன்படி, கண்டகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட மொத்தம் 11 பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர வேறு எந்த சாதகமான சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) |