ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரிக்கு இராணுவ தளபதியினால் வாழ்த்துக்கள்

23rd April 2020

இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்கள் 21 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் இவரது இராணுவ சேவையை கெரவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இவர் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரியும் இராணுவத்தில் சிறந்த சேவையை ஆற்றிய அதிகாரியும் ஆவார்.

இச்சந்திப்பின் இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |