பூனானை,கண்டக்காடு,மீயாங்குளம் மற்றும் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 233 பேர் வீடுகளுக்கு செல்லல்
26th March 2020
பூனானை(125),கண்டக்காடு(42),மீயாங்குளம் (18) மற்றும் தியத்தலாவை(2கொரியா,2 ஈரான் உள்ளிட்ட 4 வெளிநாட்டவர்கள் உட்பட 38பேர் ) ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 233 பேர் கொண்ட மூன்றாவது குழுவினர் தனிமைப்படுத்தல் சான்றதல்களுடன் தங்களது வீடுகளுக்கு இன்று காலை 26 ஆம் திகதி புறப்பட்டனர்.
காலி,கொழும்பு,கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர். |