இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சமாதான நடவடிக்கைகளின் போது சிறந்த சேவையை வழங்கி படையினருக்கான கௌரவிப்பு

4th March 2019

குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சமாதான நடவடிக்கைகளின் போது சிறந்த சேவையை 29வருட காலமாக வழங்கிய 10 அதிகாரிகள் மற்றும் 25 படையினருக்கான கௌரவிப்பு நிகழ்வானது இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களின் தலைமையில் கடந்த வியாழக் கிழமை (28) இடம் பெற்றது.

அந்த வகையில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியானது மேலும் 2009ஆம் ஆண்டு இடம் பெற்ற பயங்கரவாத யுத்தன்தின் போது மேலும் பல படையணிகளோடு இணைந்து இப் படையணியானது சிறந்த சேவையை வழங்கியது.

இந் நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் தளபதியான பிரிகேடியர்; ஏ ஜெ குணவர்தன பிரதி தளபதியான கேர்ணல் எஸ் ஜெ என் மகேஷ் குமார மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். |