கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதி பதவியேற்பு
20th April 2018
கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 11ஆவது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன அவர்கள் (18) ஆம் திகதி புதன் கிழமை இப் படைத் தலைமையக இராணுவ சம்பிரதாயத்துடன் உத்தியோக புர்வ பதவி பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன அவர்கள் கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பதவி பொறுப்பேற்பதற்கு முன் 11ஆவது படைப் பிரிவில் கட்டளை தளபதியாக சேவை புரிந்தார்.
இப் புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்துடன் 24 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 3 ஆவது கஜபா படையணியினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
ஆதனைத் தொடர்ந்து இப் புதிய கட்டளை தளபதியவர்களால் மங்கள விளக்கேற்றி உத்யோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டபின் அவர் தனது அலுவலக கடமை பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து இவ் வளாகத்தில் சந்தன மரக் கன்றும் நடப்பட்டதை தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் புதிய பதவி நிலை பிரதாணியாக நியமிக்கப்பட்டதின் பின் இப் படைத் தலைமையகத்துக்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன அவர்கள் கடமை பொறுப் பேற்றார்.
|