66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு

16th April 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்கள் புதன்கிழமை (11) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் படையினர் வரவேற்றனர்.

பின்பு சமய சம்பிரதாய ஆசிர்வாத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார். பின்பு தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு அனைத்து படைத் தலைமையக கட்டளை அதிகாரிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள் , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

|