ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தினுள் இராணுவத்தினர் சிரமதான பணிகள்
23rd March 2018
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினால் ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
64 ஆவது படைப் பிரிவின் இராணுவத்தினர் மற்றும் ஒட்டுசுட்டான் வைத்திசாலை ஊழியர்களும் இணைந்து இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 64 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
இந்த சிரமதான பணிகளில் இராணுவத்தினர் ஒரு அதிகாரி உட்பட 50 படை வீரர்கள் பங்கு பற்றினர்.
|