புதிய 65 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

16th March 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் அவர்கள் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதிக்கு 1 ஆவது கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து சமய சம்பிரதாய ஆசிர்வாத நிகழ்வுகளின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

பின்பு அனைத்து இராணுவத்தினரது பங்களிப்போடு படைத் தளபதி தேநீர் பிரியாவிடையில் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் 651, 652 மற்றும் 653 ஆவது கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|