வலைப் பந்தாட்ட போட்டியில் 7ஆவது மகளீர் படையணிக்கு வெற்றி

15th February 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மகளீர்களுக்கான வலைப் பந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டி செவ்வாய்க் கிழமை (13) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு தலைமையக மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த போட்டியில் இராணுவ மகளீர் படையணியின் ஐந்து அணியினர் பங்கு பற்றினர்.

இந்த போட்டிகள் அனைத்தும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 515 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் 7 ஆவது மகளீர் படையணி வெற்றியை சுவீகரித்துகொண்டு சம்பியன்சிப்பை பெற்றுக்கொண்டது. ஏழாவது மகளீர் படையணியின் ‘ஏ’ அணியினர் இரண்டாவது இடத்தையும் யாழ் பாதுகாப்பு மகளீர் படையணியினர் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த விளையாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வெற்றியீட்டிய வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|