மத்திய படையினர் மொனராகலை தீயனைப்பு பணிகளில் ஈடுபாடு

7th February 2018

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 18ஆவது கெமுனு ஹேவா படையினரின் தலைமையில் மொனராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட சுதுவத்துரவ கும்புக்கன்ன பிரதேசத்தில் கடந்த செவ்வாயக் கிழமை (06) ஏற்பட்ட திடீர் தீயைக் கட்டுப் படுத்தும் நோக்கில் படையினர் உடனடியாக செயற்பட்டனர்.

இவ்வாறு அதிகாலை வேளை ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் வெல்லவாய பிரதேசத்தில் அமைந்துள்ள 121ஆவது படைப் பிரிவின் 8ஆவது கெமுனு ஹேவா படையினரின் இப் பிரதேசத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களி;ன் வழிகாட்;டலின் கீழ் 12ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் க்ண்காணிப்பின் கீழ் கிட்டத் தட்ட 30ற்கும் மேற்பட்ட படையினர் இப் பணிகளை மேற்கொண்டனர்.

அன்றய தினமே (6) மொனராகலை பிரதேசத்தில் நல்லிரவு தீடிரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

|