வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவ நடமாடும் சேவையின் பயனைப் பெற்றனர்
22nd January 2018
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவினரின் மற்றும் 306 டீ1 லயன்ஸ் கழகத்தினரின் ஒருங்கிணைப்போடு மருத்துவ நடமாடும் சேவையானது திருகோணமலை முல்லிப்பொத்தானை ஸ்ரீ அக்ரபோதி விகாரையில் கடந்த சனிக் கிழமை (13) இடம் பெற்றது.
இச் சேவiயில் 200 நோயாளர்கள் பங்கேற்றதோடு 85 மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவ் மருத்துவ நடமாடும் சேவையில் தோல் கண் மற்றும் காது போன்றவற்றிற்கான கிளினிக்குகள் இடம் பெற்றன.
இதே நிகழ்வில் 100ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மற்றும் 20 பொது மக்களுக்கான உலர் உணவூப் பொதிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் படையினரால் நோயார்களுக்கு உணவூப் பண்டங்கள் போன்றன வழங்கப்பட்டதோடு முல்லிப்பொத்தானை லயனஸ் கழகத்தின் வைத்தியர் ஜீவாநந்த பெரேரா அவர்களின் தலைமையில் மகிழ்ச்சியான வாழ்வூ எனும் தலைப்பிலான கருத்தங்கு இராணுவத்தினருக்கு இடம் பெற்றது.
இந் நிகழ்வானது 15ஆவது இலங்கை இலேசாயூத காலட் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எச் கே ஜெ யூ ஜயரத்தின அவர்களின் கண்காணிப்பில் 224ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கீர்த்தி கொட்டவத்தை மற்றும் 22ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
|