நத்தார் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரால்முரசுவில் பிரதேசத்தின் 400 மேட்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி

25th December 2017

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் மற்றும்‘சுசரண லங்கா சமுக அபிவிருத்தி மன்றம்’இணைந்து யாழ் முரசுவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் உஷான் ராமநாதன் வித்தியாலயத்தில் ஞாயிற்றுகிழமை(24)ஆம் திகதி வைத்திய பரிசோதனையைநடத்தினர். இந்த மருத்துவ பரிசோதனையில் 400க்கு மேட்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியதோடு வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைதளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிஅவர்களின் வேண்டுகோலுக்கமைவாக மிருசுவில் பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பத்தினருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையை வழங்குவதற்காககண்டி ‘சுசரண லங்கா சமுக அபிவிருத்தி மன்றத்தின் வைத்திய ஆலோசனைக் குழுவினர் யாழ் நகருக்கு வருகை தந்தனர்.

சுசரண லங்கா சமுக அபிவிருத்தி மன்றத்தின்”அதிகாரிபூஜ்ய கழஹிட்டியகொட சுமனரத்ன மற்றும் ‘சுசரண லங்கா சமுக அபிவிருத்தி மன்றத்தின வைத்தியர் அனுர ராஜபக்ஷமற்றும் 22ஆவது படைத்தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் அனுர வன்னியாராச்சிஅவர்கள்இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்மற்றும் வைத்தியர்கள்பாடசாலை அதிபர் உஷான் ராமநாதன்அரசாங்க அதிபர் டி.சோதலிங்கம் அவர்கள் மற்றும் இராணுவ படையினர்மற்றும் சிவில் மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த இலவச மருத்துவ சிகிச்சைக்காக 400க்கு மேட்பட்ட நோயாளர்கள் மருத்துவ மனையில்மருத்துவபரிசோதனை செய்யப்பட்டனர்.

இந்த மருத்துவ பரிசோதனையானது நத்தார் தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட பரிசு என பொதுமக்களுக்காக வழங்கப்பட்டது.

|