லாஜிஸ்டிக் அதிகாரிகளின் தலைமையில் இராணுவ வைத்தியசாலையில் இடம் பெற்ற கருத்தரங்கு
20th December 2017
ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான சேதம் எனும் தலைப்பில் இராணுவ வைத்தியசாலைப் பிரிவினரால் அறிவூட்டல் நிகழ்வானது நாராஹென்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை (15) இடம் பெற்றதுடன் பாரிய அளவிலான லாஜிஸ்டிக் அதிகாரிகள் இதன் போது கலந்து கொண்டனர்.
இவ் ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான சேதம் எனும் திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான உணவூப் பழக்கவழக்கங்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான உணவு விதிமுறைகள் போன்றவை தொடர்பான வழிப்புணர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இத் திட்டத்தின் தலைவரான பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன உளவியல் நிபுணரான கேர்ணல் ஆர் எம் எம் மொணராகலை . லெப்டினன்ட் ஏ சி கே உடுகம, மேலதிக விரிவுரையாளர் திரு தர்மசிறி மற்றும் போசனை உணவுகள் தொடர்பான விரிவுரையாளர் திருமதி குமுதினி சத்ரசிங்க போன்றோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இரத்த அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களால் இத் திட்டத்தின் முக்கியத்தும் எடுத்துக்காட்டப்பட்டது.
அத்துடன் 150 அதிகாரிகள் . படையினர் அனைத்துப் படைத் தலைமையகங்களையும் உள்ளடங்க்கிய படையினர் மற்றும் 3ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சேவைப் படையின் பயிற்றுவிப்பு மையத்தின் அதிகாரிகள் உள்ளடங்களாக இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
|