இராணுவத்தினரால் கிளிநொச்சி தெவம்பிடி பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள்
13th November 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சி தெவம்பிடி அரசு பாடசாலை மாணவர்கள் 312 பேருக்கு (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அனுசரனையுடன் உபகரணங்கள் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள்,தண்ணீர் போத்தல்கள்,அப்பியாச புத்தகங்கள்,காலணிகள்,வர்ண பென்சில்கள்,வர்ண பெட்டிகள்,கணித துருவி பெட்டிகள்,பெட்மின்டன் ரெக்கிட்,கிரிக்கெட் பந்துகள்,பெட்கள்,கால்பந்து மற்றும் கரப்பந்துகள் உள்ளடக்கப்பட்ட 300,000 ரூபாய் பெறுமதிமிக்க உபகரணங்கள் நன்கொடை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 651 படைத் தலைமையகத்தின் மேற்பார்வையில் 15 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியின் பய்களிப்புடன் இந்த நிகழ்வுகள் ஓழுங்கு செய்யப்பட்டன.
இந் நிகழ்விற்கு 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன, 651 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் கே.பி.ஆர் அபேசிங்க,பொது மக்கள் ஒருங்கினணப்பு அதிகாரியான ரவி மென்டிஸ்,சிரேஷ்ட காப்புறுதி கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|