இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்கு இரத்த தானம்

22nd October 2017

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு வன்னி பாதுகாப்பு படைத தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவத்தைச் சேர்ந்த 100 க்கு மேலதிகமான படையினர் வவுனியா வைத்தியசாலையின் நோயாளிகளது தேவைகள் நிமித்தம் இந்த இரத்த தானங்களை வழங்கினர்.

|