இராணுவ நிறைவாண்டை முன்னிட்டு 53ஆவது படைப்பிரிவினரால் பல்வேறு நிகழ்வுகள்
13th October 2017
இராணுவ ஆண்டு நிறைவையிட்டு 53 ஆவது படைப் பிரிவினால் இனமாலு,தம்புள்ள பகுதிகளில் சமூக சார்ந்த வேலைத் திட்ட நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றன்.
மேலும் 53 ஆவது படைப் பிரிவினால் வியாழக்கிழமை (5)ஆம் திகதி ஆம் திகதி போதி மலுவவத்தை விகாரையில் ஆசீர்வாத பூஜைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து படையினரால் அந்த விகாரையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மதடுகம தொழில் பயிற்சி நிலையத்தின் உள்ள அங்கவீனமுற்ற நபர்களுக்கு பகல் உணவு விருந்தோம்பலும் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகளிற்கு 53ஆவது படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பில்லி மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
|