அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் யாழ் படைத் தளபதியை சந்திப்பு
29th September 2017
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரான பிரயிஷ் ஹட்ஷன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பலாலி யாழ் தலைமையகத்தில் சந்தித்தார்.
இவ்விருவரது சந்திப்பின் போது பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது. இறுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் உயர் ஸ்தானிகரின் வருகையிட்டு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
|