இராணுவ சிறப்பம்சம்
542 வது காலாட் பிரிகேட்டினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
பூமலாந்தன் ஆரம்ப பாடசாலையில் பூமலாந்தன் ஆரம்ப பாடசாலை மற்றும் மது சிங்கள மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 94 மாணவர்களுக்கு 542 வது காலாட் பிரிகேட்டினரால் 2025 ஜனவரி 7 அன்று அத்தியாவசிய கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி
கெமுனு ஹேவா படையணி படையினர் கஹெங்கம பிரதேசத்தினருடன் இணைந்து, 2025 ஜனவரி 04, அன்று கஹெங்கம பகுதியில் 2000 மீட்டருக்கும் அதிகமான சாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 4 வது மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணிகளுக்கு விஜயம்
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 07 ஜனவரி 2025 அன்று 4 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணிக்கு முறையான விஜயம் மேற்கொண்டார்.
வழங்கல் கட்டளை தலைமையகத்தின் 45 வது ஆண்டு நிறைவு
வழங்கல் கட்டளை தலைமையகத்தின் 45 வது ஆண்டு நிறைவினை, வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடீஓ அவர்களின் வழிகாட்டலின் கீழ், பனகொடையில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி வளாகத்தில், இராணுவ சம்பிரதாயங்களுடன் 2025 ஜனவரி 8 ஆம் திகதி கொண்டாடியது.
மேற்கு தளபதியினால் 2024 ஆம் ஆண்டின் சிறந்த அணிநடை பயிற்சி பயிற்றுவிப்பாளராக்கான விருது வழங்கல்
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவப் படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 ஆம் ஆண்டு ‘சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக 9 வது கள பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஐ.ஜி.எஸ்.பி.ஜே. இஹலகெதரவைப் பாராட்டினார்.
புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கடமையேற்பு
இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 8 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 40 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பருத்தித்துறையில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
பருத்தித்துறை பாவற்கரை ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக 4வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளிக்கு 06 ஜனவரி 2025 அன்று கையளித்தார்.
பீரங்கி படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் 24வது படைத் தளபதியாக 2025 ஜனவரி 02 அன்று பனாகொட பீரங்கி படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
12 வது கெமுனு ஹேவா படையினரால் நன்கொடை திட்டம்
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் விஜய பராக்கிரம ஆரம்ப பாடசாலை மற்றும் திம்புலாகல களுகல பலட்டியாவ ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளின் 722 மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வை 05 ஜனவரி 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
பொறியியல் சேவைகள் படையணியில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகம் திறப்பு
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.