இராணுவ சிறப்பம்சம்
12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஜூன் 12 ஆம் திகதி 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 21வது காலாட் படைப்பிரிவின் 43 வது தளபதியாக 2025 ஜூன் 13 ம் திகதியன்று 21 வது காலாட் படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் விழுந்த மரங்களை அகற்ற உதவி
சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பலாங்கொடை ராஜாவாக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பலாங்கொடை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து விழுந்த மரங்களை அகற்றி பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
புதிய உபகரண பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஈ.எம்.ஜீ.ஏ. அம்பன்பொல அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
அபிமன்சல II னால் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி ஏற்பாடு
போசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூரும் வகையில், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல II நல விடுதியில் சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த முயற்சி, உள்நாட்டு போர் வீரர்களின் ஆன்மீக மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொடர்ச்சியான மறுவாழ்வு பயணத்தை ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
59 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் தானம் மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 2025 ஜூன் 09 ஆம் திகதி சீனி சம்பல் பனிஸ் மற்றும் கொத்தமல்லி பானம் என்பவற்றை வழங்கினர்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் அன்னதானம்
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் தம்புள்ளை பொருளாதார நிலைய உறுப்பினர்களுடன் இணைந்து, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 10, அன்று தம்புள்ளை பொருளாதார நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படையினரின் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்
கெந்தலந்த அதிகாரிகள் திருமண விடுதி வளாகத்தில் வசிக்கும் அதிகாரிகளின் குடும்பத்தினர் 2025 ஜூன் 11, அன்று கந்லந்த அதிகாரி திருமண விடுதி வளாகத்தின் முன் ஐஸ்கிரீம் மற்றும் தேநீர் தானம் வழங்கினர்.
கொமாண்டோ படையணியினால் இரத்த தான முகாம் ஏற்பாடு
இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களை ஆசிர்வதிக்கும் வகையில், கொமாண்டோ படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ராகம போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, கொமாண்டோ படையணி வளாகத்தில் 2025 ஜூன் 11 ஆம் திகதி இரத்த தான முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, இலங்கை இராணுவ பௌத்த சங்கத்துடன் இணைந்து 2025 ஜூன் 10 ம் திகதி அன்று பனாகொடை ஸ்ரீ மஹா போதிராஜராமையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'சீல சமாதி' நிகழ்வு ஏற்பாடுடன் பொசன் பௌர்ணமி தினத்தைக் கொண்டாடியது.