இராணுவ சிறப்பம்சம்
10 வது விஜயபாகு காலாட் படையணியினரால் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மரம் நடுகை திட்டம்
77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.கே.எஸ்.பீ.எம்.ஆர்.ஏ.பி. தொடம்வல பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எச். சுதுசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04 ம் திகதி மணல்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 10வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
61 வது காலாட் படைப்படைப்பிரிவினால் காலியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம்
தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு. நலின் ஹேவகே அவர்களின் தலைமையில், தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக "அழகான தீவு, சிரிக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ், பெந்தோட்டை தொடக்கம் கொவியாபனை வரையிலான பாரிய கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஜனவரி 12 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படையினரால் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் திட்டம்
காட்டு யானைகளால் நெல் வயல்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கும் வனவிலங்கு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கிழக்கு பாதுகாப்புப் படை 2025 ஜனவரி 02 அன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் தொற்று நோய்கள் குறித்த விரிவுரை
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.
யாழ். வலிகாமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஏழைக் குடும்பத்திற்கு கையளிப்பு
ஆதரவு மற்றும் சமூக ஒத்துழைப்பின் அடையாளமாக உடுவில், வலிகாமம் தெற்கு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு 2025 ஜனவரி 11 ஆம் திகதி ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
21 வது காலாட் படைப்பிரிவு படையினரால் திவுல்வெவ குளக்கட்டு சீரமைப்பு
21 வது காலாட் படைப்பிரிவு படையினர், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2025 ஜனவரி 10 ஆம் திகதி திவுல்வெவ குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை வெற்றிகரமாக சரிசெய்தனர். இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது.
12 வது கஜபா படையணியின் ஒருங்கிணைப்பில் பாடசாலை உபகரண நன்கொடை
12 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஏ.கே குணரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 4, அன்று ஹம்பாந்தோட்டை கிரிந்தகம ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
213 வது காலாட் பிரிகேடினால் சமூக நலத்திட்டம் ஏற்பாடு
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், செட்டிகுளம், முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கண் மற்றும் மருத்துவ பரிசோதனைத் திட்டம் நடாத்தப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி படைத்தலைமையகத்தில் படையினருக்கு உரை
இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆரடபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 07, அன்று பனாகொடையில் உள்ள படையணி மையம் மற்றும் மத்தேகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் 36 வது ஆண்டு நிறைவு
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை 06 ஜனவரி 2025 அன்று குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை வளாகத்தில், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் கொண்டாடியது.