செய்தி சிறப்பம்சங்கள்
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி கௌரவிப்பு
35 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விடிஎஸ் பெரேரா அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இலங்கை பீரங்கிப் படையணியின் 137 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களுக்கு இராணுவத் தளபதி அஞ்சலி
இலங்கை பீரங்கிப் படையணி தனது 137வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டாடியது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிகாரச் சின்னம் பெறல்
அன்மையில் நிலை உயர்வு பெற்ற விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 16, அன்று இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடம் இருந்து தனது உத்தியோகபூர்வ சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இராணுவ தலைமையகத்தில் தேநீர் விருந்து
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (2025 ஏப்ரல்16) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண். 7 இன் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்
திருகோணமலை வழங்கல் பாடசாலையில் 2025 ஜனவரி 06 முதல் 2025 ஏப்ரல் 02 வரை நடாத்தப்பட்ட உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண். 7 வெற்றிகரமாக 99 அதிகாரிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புத்தாண்டு கொண்டாட்டம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கலாசார மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு இணங்க புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கொண்டாடியது.
ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி
2025 ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தற்போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
2025 படையணிகளுக்கிடையிலான செபக்டக்ரா சாம்பியன்ஷிப்பில் விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி வெற்றி
இராணுவ காற்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கிடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் 13 படையணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது. 13 படையணிகளின் அணிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான போட்டியின் பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி மற்றும் இலங்கை இராணுவ இராணுவ பொலிஸ் படையணியின் செபக்டக்ரா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி 02 க்கு 00 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் இரண்டு நாள் பட்டறை
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இரண்டு நாள் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பாதுகாப்பு உயரதிகாரி இராணுவத் தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான மாலைத்தீவின் பாதுகாப்பு ஆலோசகரும், ஆவுஸ்திரேலியாவிற்கு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் ஹசன் அமீர், இன்று (ஏப்ரல் 10) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.