சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2025-04-04
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எம் மோனிருஸ் அமான் டிஏஎஸ் என்ஜிபீ பீஎஸ்சீ பிஎன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி பனாகொடையில் நிறைவு

2025-04-04
13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி பனாகொடையில் நிறைவு

இலங்கை இராணுவ தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி - 2024/2025, இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், பனாகொடை இராணுவ முகாமில் 2025 மார்ச் 23, அன்று நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி ரணவிரு வள மையத்தில் தேசிய தொழிற் தகைமை நிலை 4 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றல்

2025-04-03
இராணுவத் தளபதி ரணவிரு வள மையத்தில் தேசிய தொழிற் தகைமை நிலை 4 சான்றிதழ்

ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளை நிறைவு செய்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற் தகைமை நிலை 4 க்கு வெற்றிகரமாக தகுதி பெற்ற முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 30 பங்கேற்பாளர்களுக்கான இறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ம் திகதி வத்தளை ரணவிரு வள மையத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

மறைந்த மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அதிகாரியின் இறுதி மரியாதை

2025-04-01
மறைந்த மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) அவர்களுக்கு இராணுவ பாதுகாப்

2025 மார்ச் 31, அன்று திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இணைந்து, கெமுனு ஹேவா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) அவர்களுக்கு ஜயரத்ன மலர்சலையில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி ‘அபிமன்சல 3’ மருத்துவ முகாமுக்கு விஜயம்

2025-03-29
இராணுவத் தளபதி ‘அபிமன்சல 3’ மருத்துவ முகாமுக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் 2025 மார்ச் 28, அன்று பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியின் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முயற்சி குருநாகல் பகுதியில் உள்ள அங்கவீனமுற்ற முன்னாள் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி சிறப்பு இப்தார் நிகழ்வில் பங்குபற்றல்

2025-03-27
இராணுவத் தளபதி சிறப்பு இப்தார் நிகழ்வில் பங்குபற்றல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மார்ச் 26 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழா, புனித ரமலான் மாதத்தில் பாரம்பரியமாக இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில், இலங்கை இராணுவத்திற்குள் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தியது.

மேலும் வாசிக்க

சிரேஷ்ட கட்டளை பாடநெறி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

2025-03-27
சிரேஷ்ட கட்டளை பாடநெறி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

சிரேஷ்ட கட்டளை பாடநெறி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் இலங்கை இராணுவத்தில் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கான சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண். 13 இன் மாணவ அதிகாரிகள், தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 மார்ச் 26 அன்று, இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-03-27
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.பீ வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 2025 மார்ச் 26 ம் திகதியன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பகுதியில் நிருவாக ஆராய்வு

2025-03-22
இராணுவத் தளபதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பகுதியில் நிருவாக ஆரா

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 21 ஆம் திகதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிருவாக ஆராய்வு ஒன்றை மேற்கொண்டார். இப்பயணம், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாட்டுகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

மேலும் வாசிக்க

கஜபா இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு கௌரவிப்பு

2025-03-22
கஜபா இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானிக்க

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 21 ஆம் திகதி பாராட்டு விழா இடம்பெற்றது. படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணியின் ஸ்தாபகரான மேஜர் ஜெனரல் டபிள்யூஐவீகேஎம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் வாசிக்க