செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 13 ஆம் திகதி 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ காலமானார்
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 13 அன்று தனது 91 வயதில் காலமானார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையணிகளுக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 12 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி, 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி
இலங்கை இராணுவ முய்தாய் தடகள வீரர்கள் 2025 ஜூன் 05 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் 17 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தமது வெற்றியை பதித்தனர்.
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.
தொண்டர் படையணி தலைமையகத்தில் புதிய அதிகாரிகள் உணவகம் திறந்து வைப்பு
தொண்டர் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள் உணவகம், இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களால் 2025 ஜூன் 5 அன்று மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட மத சடங்குகளுடன், திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இந்திய - இலங்கை நட்புறவு வாசிப்புப் பிரிவு திறந்து வைப்பு
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் 2025 ஜூன் 06 அன்று இந்திய-இலங்கை நட்புறவு வாசிப்புப் பிரிவின் ஆரம்பத்துடன் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது, இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்திய இராணுவத்தின் பணியாளர் கடமைகள் பணிப்பாளர் நாயகம் இராணுவத் தளபதியை சந்திப்பு
2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்க தற்போது இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தின் பாதுகாப்புத் அமைச்சின் பணியாளர் கடமைகள் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் எம்பீ சிங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன்...