செய்தி சிறப்பம்சங்கள்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி யக்கலைக்கு முதல் விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் ரணவிரு எப்பரல் ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி யக்கலை ரணவிரு எப்பரல் தொழிற்சாலைக்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை இராணுவத்தினரால் ஊவா மாகாணத்தில் காயமடைந்த படைவீரர்களுக்கான மருத்துவ முகாம்
ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஜூலை 30 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. ஊவா மாகாணத்தில் வசிக்கும் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ பதவி நிலை பிரதானியை சந்திப்பு
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜூலை 17 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இராணுவத் தலைமையகத்தில் ‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ ஆரம்ப விழாவில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 16 அன்று தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி
இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 'இராணுவத்திலிருந்து சிவில்' வாழ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் வலுவூட்டல் திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி
2025 ஜூலை 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் ஆரம்ப விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினால் நலன்புரி திட்டம் முன்னெடுப்பு
இராணுவ சேவையில் உள்ள பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்துடன், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2025 ஜூலை 09 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் ஒரு நலன்புரி திட்டம் நடத்தப்பட்டது.
பிரதி பதவி நிலை பிரதானி கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்
இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 09 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத் தளபதியால் ராஜங்கனையில் பணிநிலை அதிகாரியின் குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு
ராஜங்கனை 5 வது (தொ) கஜபா படையணியின் பணிநிலை சாஜன்ட் டபிள்யூஎம்ஜீஎம் மங்கள அவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 2025 ஜூலை 09 ம் திகதியன்று கையளித்தார்.
இராணுவத் தலைமையகத்தில் ‘அவசன் சடனே மியகிய அவசன் செபலா’ புத்தக வெளியீட்டு விழா
The book launch ceremony for ‘Awasan Satane Awasan Sebala’ (Last Soldier of Last Battle), authored by Lieutenant Colonel E.A.A. Sujith Chaminda was held at the Army Headquarters on 08 July 2025. The Commander of the Army, Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, graced the occasion as the Chief Guest.