செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இராணுவத் தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. ரெமி லம்பேர்ட், பிரான்சின் பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் இம்மானுவேல் பெல்ட்ரியோக்ஸுடன் இணைந்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூலை 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கிராண்ட் மைட்லேண்டிற்கு விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 28 ஆம் திகதி கொழும்பு 07, கிராண்ட் மைட்லேண்டில் உள்ள நலன்புரி வசதி வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
2025 தேசிய படகுப் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு அனைத்திலும் சாம்பியன் பட்டம்
தேசிய படகோட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜூலை 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் 34 வருட சிறப்பு மிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஜூலை 24 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்திற்கு விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 22 ஆம் திகதி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக விஜயம் மேற்கொண்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி குக்குலேகங்க லயா ஓய்வு விடுதிக்கு விஜயம்
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 20 ஆம் திகதி குக்குலேகங்க லயா ஓய்வு விடுதிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை கூட்டு பயிற்சியில் பங்கேற்பு
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் பின்னர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இராக்காவல், விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் மற்றும் சுதந்திர நடமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தோனேசிய பாதுகாப்பு படை குழு மற்றும் மலேசியப் படையலகுகலுடன் இணைந்து, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதன வெடிப்பைத் தொடர்ந்து, பதுங்கியிருந்து இராக்காவல், விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் மற்றும் சுதந்திர நடமாற்றம் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவை முய்தாய் போட்டியில் சாதனை
இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் இராணுவ முய்தாய் போட்டியில் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று, சர்வதேச அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தனர். உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு இராணுவத்தினருக்கு எதிராகப் போட்டியிட்டு, போட்டி முழுவதும் திறமை, ஒழுக்கம் மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தினர்.
இராணுவ பதவி நிலை பிரதானி பொறியியல் இல்லத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி மத்தேகொடை பொறியியல் இல்லத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.