செய்தி சிறப்பம்சங்கள்
நிலை 2 இலங்கை இராணுவ வைத்திய படையின் 11வது குழுவினரின் தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணி ஆரம்பம்
தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் வியாழக்கிழமை (13) தனது பணியைத் தொடங்கினர்.
பாதுகாப்பு சேவைகள் கோல்ப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வரலாற்று வெற்றி
இலங்கை இராணுவ கோல்ப் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 13 வது பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நுவரெலியா கோல்ப் கழகத்தில் நடைபெற்றது. இதில் முப்படைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கோல்ப் வீரர்கள் பங்கேற்றனர்.
உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ கடற்கரை கரப்பந்து வீரர்கள் வெற்றி
சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 இல் இலங்கை இராணுவம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டி 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 02 வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் 160 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தூதுக்குழு இராணுவத் தளபதியைச் சந்திப்பு
தற்போது உயர் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (11) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.
தென் சூடானில் உள்ள நிலை 2 மருத்துவமனையில் 10 வது குழுவின் பணிக்காலம் நிறைவு
தென் சூடான் நிலை 2 மருத்துவமனையில், 9 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்களை கொண்ட தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அமைதி காக்கும் 10 வது குழு ஒரு வருட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 2025 பெப்ரவரி 11, அன்று இலங்கைக்கு வருகை தந்தது. ஏனைய 07 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் தென் சூடானில் தங்கியிருப்பதுடன், அவர்கள் கடமைகளை முடித்த பின்னர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 11 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அதிகாரவாணையற்ற அதிகாரி II சமித்த துலானுக்கு உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் தங்கப் பதக்கம்
இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.ஏ. சமித்த துலான் அவர்கள் உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.
இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதிக்கு பிரியாவிடை
இலங்கை இராணுவத்தின் முன்னாள் பதவி நிலை பிரதானியும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு, 2025 பெப்ரவரி 8 அன்று அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
இராணுவத் தலைமையகத்தில் புதிய பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 66 வது பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.