சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

2025-02-01
பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய

பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக இலங்கை இராணுவத்தின் 11 சிறிமெட் குழு தென் சுடானுக்கு புறப்பட தயார்

2025-01-31
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக இலங்கை இராணுவத்தின் 11 ச

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 11 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் 2025 ஜனவரி 31 வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

மேலும் வாசிக்க

படைத்தளபதி 11 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

2025-01-31
படைத்தளபதி 11 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 23 அன்று 11வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார்.

மேலும் வாசிக்க

இலங்கையில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் ரஷ்ய இராணுவக் குழு பங்கேற்பு

2025-01-29
இலங்கையில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் ரஷ்ய இராணுவக் குழு பங்கேற்ப

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உயர்மட்ட ரஷ்ய இராணுவக் குழுவினர் பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2025-01-29
மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-01-29
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜனவரி 28 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

2025-01-27
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்தின் சமீபத்தில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள், 2025 ஜனவரி 27அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் எல்லே போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி

2025-01-25
2025 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் எல்லே போட்டியில் இலங்கை இராணுவம

பாதுகாப்பு சேவைகள் எல்லே விளையாட்டு போட்டி 2025 இல் இராணுவ எல்லே அணி வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாம்பியன்ஷிப்பைப் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ படையினர் பாரம்பரிய இசை சிகிச்சை அமர்வை நடத்தினர்

2025-01-25
இலங்கை இராணுவ படையினர் பாரம்பரிய இசை சிகிச்சை அமர்வை நடத்தினர்

இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 21 அன்று ரெண்டெஸ்வேவ்ஸ் மைதானத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ். திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதையில் இராணுவ பதவி நிலை பிரதானி

2025-01-21
மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ். திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இற

32 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக சேவை செய்த இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை திங்கட்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் மஹாயாவ மயானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க