செய்தி சிறப்பம்சங்கள்
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்திலிருந்து 36 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2025 மார்ச் 11 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.
கெமுனு ஹேவா படையணி படையினரின் துணிச்சல் மற்றும் விரைவான நடவடிக்கைக்கு இராணுவ தளபதியின் பாராட்டு
கெமுனு ஹேவா படையணியின் அனர்த்த முகாமைத்துவ நிவாரண படையினர், 2025 மார்ச் 01, அன்று ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை மீட்டதன் மூலம் தமது துணிச்சலை வெளிப்படுத்தினர்.
அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலைக்கு இராணுவத் தளபதி விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையின் செயல்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்குடன் 2025 மார்ச் 11 ம் திகதி விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ தடகள வீரர் ஈட்டி எறிதலில் புதிய சாதனையை நிலைநாட்டி உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி
தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மாத்தளை விஜய கல்லூரியில் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாராட்டு
மாத்தளை விஜய கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் புகழ்பெற்ற பழைய மாணவரான, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 2025 மார்ச் 06ஆம் திகதி நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவித்தனர்.
இராணுவத் தளபதி தனது முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர்களுடன் சந்திப்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது பயிலிளவல் கால பயிற்றுவிப்பாளர்களுடன், தனது இராணுவ வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை நினைவு கூறும் வகையில் தனது அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரியின் சிறந்த சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்திலிருந்து 33 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் பீ. விதானகே அவர்கள் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
பொறியியல் சேவைகள் படையணியின் ‘75 வருட பெருமை’ சஞ்சிகையின் முதல் பிரதி இராணுவ தளபதிக்கு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 06 அன்று தனது அலுவலகத்தில் புதிதாக தொகுக்கப்பட்ட 75 ஆண்டுகள் பெருமை இதழின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.