மீளமைப்பு

இலங்கை இராணுவம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க எலஹெர அணைக்கட்டு 2025 டிசம்பர் 30, அன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பண்டைய கட்டமைப்பு பெரும் சேதத்துக்கு உள்ளாகியதை தொடர்ந்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


நாட்டைப் பாதித்த சீரற்ற வானிலைக்கு பதிலளிக்கும் விதமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய, 242 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், 2026 ஜனவரி 07 ஆம் திகதி தூவே குளத்தின் பக்கவாட்டு கரையை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொண்டனர்.