பண்டாரவளை, பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று கலந்து கொண்டார். பெருந்தோட்டதுறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் 11 வது பொறியியல் சேவை படையணி படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.