செய்தி சிறப்பம்சங்கள்
கமாண்டோஸ் பாடநெறி எண் 52 ஏ மற்றும் பி விடுகை அணிவகுப்பில் இராணுவ தளபதி
07 அதிகாரிகள் மற்றும் 78 சிப்பாய்கள் கொண்ட 52 ஏ மற்றும் பி கமாண்டோஸ் பாடநெறியின் விடுகை அணிவகுப்பு, 2025 செப்டம்பர் 20 அன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தினால் நாடு முழுவதும் காயமடைந்த போர்வீரர்களுக்கான மருத்துவ முகாம்
இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் படைவீரர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, காயமடைந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கமாண்டோக்களின் தந்தை தனது புத்தகத்தை இராணுவத் தளபதியிடம் பரிசளிப்பு
லெப்டினன் கேணல் எஸ்.டி. பீரிஸ் யூஎஸ்பீ பீஎஸ்சி (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆர்எஸ்பீ சிடீஎப்-என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்களை சந்தித்து, அவர் எழுதிய “எனது கமாண்டோ படையணியுடனான பயணம்” என்ற புத்தகத்தை 2025 செப்டம்பர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.
இராணுவ தளபதியை இந்திய இராணுவத்தின் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நாயகம் மரியாதை நிமித்தம் சந்திப்பு
இந்திய இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.எஸ். ராமன் பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வைஎஸ்எம் அவர்களுடன், பிரிகேடியர் எஸ்.எஸ். தலிவால் எஸ்சீ வைஎஸ்எம் எஸ்எம், கேணல் யாஷ் வர்தன் படேல், கேணல் ஆஷிஷ் சூட், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இந்திய கடற்படையின் கேப்டன் ஆனந்த் முகுந்தன், லெப்டினன் கேணல் விக்ராந்த் விஸ்வாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் ஆகியோர் அடங்கிய குழு, 2025 செப்டெம்பர் 17 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்திற்கு இராணுவத் தளபதி விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 செப்டெம்பர் 16 ஆம் திகதி இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இராவணன் நீர்வீழ்ச்சியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட விசேட படையணியின் சிப்பாய்க்கு இராணுவத் தளபதி பாராட்டு
2025 செப்டம்பர் 04 அன்று இராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம் பெற்ற பேருந்து விபத்தில் அசாதாரண துணிச்சலுடன் மூன்று பேரை மீட்கும் செயலில் ஈடுபட்ட, 2 வது விசேட படையணியின் கோப்ரல் டபிள்யூஎம்விஎம் பண்டார அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 16 ம் திகதி அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.
இலங்கை இராணுவம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு பயிற்சி திட்டத்தை நடத்தல்
இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்திற்கு இணங்க, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 12 அன்று கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் ஒரு நாள் ஊழல் எதிர்ப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.
மிஹிந்து செத் மெதுரவின் சக்கர நாற்காலி நன்கொடை நிகழ்வில் இராணுவ தளபதி
2025 செப்டம்பர் 13, அன்று மிஹிந்து செத் மெதுரவில் சிறப்பு சக்கர நாற்காலி நன்கொடை திட்டம் நடைபெற்றது, இது மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அறக்கட்டளையுடன் இணைந்து முன்னாள் படைவீரர் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் நடத்தப்பட்டது.
முன்னாள் இராணுவ வீரர்களால் இராணுவத் தளபதிக்கு 'பொப்பி' மலர் அணிவிப்பு
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் பிரதிநிதிகள் குழு, வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் எதிர்வரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி தளபதியின் அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவித்தது.
கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு இராணுவத் தளபதி விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டெம்பர் 10 ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.