இராணுவ சிறப்பம்சம்
பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) காலமானார்
பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) 2025 நவம்பர் 01 அன்று நாரஹேன்பிட்டி இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.
மறைந்த கேணல் ஆர்.ஏ.என்.பீ ரணவீர (ஓய்வு) அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை
இலங்கை சிங்க படையணியின் மறைந்த கேணல் ஆர்.ஏ.என்.பீ ரணவீர (ஓய்வு) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 நவம்பர் 01 அன்று, கொட்டாவை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 76வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
இலங்கை இராணுவ சேவைப் படையணி தனது 76வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 30 அன்று பனாகொடை படையணி தலைமையகத்தில் மிக சிறப்பாக கொண்டாடியது.
போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் பி.ஏ.பீ. லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 ஒக்டோபர் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
கேணல் ஆர்ஏஎன்பீ ரணவீர (ஓய்வு) காலமானார்
கேணல் ஆர்ஏஎன்பீ ரணவீர (ஓய்வு) அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகவீனம் காரணத்தால் 2025 ஒக்டோபர் 29, அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 55 வயது ஆகும்.
வெளிச்செல்லும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு பிரியாவிடை
59 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் உத்தியோகப்பூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.
14 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 14 வது காலாட் படைப்பிரிவின் 13 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
51 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 51 வது காலாட் படைப்பிரிவின் 36 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
முதலாம் படையின் 4வது ஆண்டு நிறைவு விழா
முதலாம் படையின் 4 வது ஆண்டு நிறைவு விழா அதன் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி தொடர் நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக, 2025 ஒக்டோபர் 15 மற்றும் 16 திகதிகளில் கிளிநொச்சி லும்பினி விஹாரை, புனித தெரசா ரோமன் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் முருக்கண்டி இந்து கோவில் ஆகிய இடங்களில் மத வழிப்பாடுகள் நடாத்தப்பட்டன.