2026-04-21
ஜப்பானில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் இராணுவ வீரர் பிரகாசிப்பு
கஜபா படையணியின் சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸ அவர்கள் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி கசுமிகௌராவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் 5 மணி நேரம், 37 நிமிடங்கள் மற்றும் 37 வினாடிகளில் பந்தயத்தை முடித்து 12வது இடத்தைப் பிடித்தார்.
ஒட்டுசுட்டானில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்ததால் அவர் தனது பார்வையை இழந்தார். அவர் தற்போது அபிமான்சல 2 நலவிடுதியில் நோயாளியாக மருத்துவப் பராமரிப்பில் உள்ளார்.