2nd July 2025
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 22 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
வருகையின் போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அன்றைய நிகழ்வை நினைவுகூரும் வகையில் வளாகத்தில் ஒரு மரக்கன்றும் நாட்டினர்.பின்னர், போர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன் அதைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.