இலங்கை இராணுவ சேவைப் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 27 வது படைத் தளபதியாக 2025 ஜூலை 02 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நுழைவாயிலில் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. மேலும் இந்நிகழ்வில் புதிய படைத் தளபதி படையினருக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.