எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

ஸ்ரீ போதிராஜ கல்லூரி மற்றும் போதிராஜ அறக்கட்டளையை நிறுவிய அதி வண. ஓமல்பே சோபித தேரரின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதிக்கு பாடசாலை இசைக்குழுவினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவின் போது, இராணுவத் தளபதி, தலைமைப் பொறுப்புகளை ஒப்படைப்பதைக் குறிக்கும் வகையில், நியமிக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.

பின்னர் உரையாற்றிய அவர், தலைமைத்துவத்தில் ஒழுக்கம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆழ்ந்த சிந்தனையையும் எழுச்சியூட்டும் உரையை ஆற்றினார். மேலும், மாணவர்கள் தங்கள் இலக்குகளை உறுதியுடன் அடையவும், தங்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் பொறுப்பான தலைமைத்துவத்தின் விழுமியங்களைக் கடைப்பிடிக்கவும் அவர் ஊக்குவித்தார்.