30th August 2025
24 வது காலாட் படைப்பிரிவின் 17 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதியை 24 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி மரியாதையுடன் வரவேற்றார். அத்துடன் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் ஒரு மரக்கன்றை நாட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.