வெவண்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள்

ரம்பொட, கெரன்டிஎல்ல, வெவண்டன் வனப்பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ 3வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் விரைவாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடர்ந்த காட்டில் சீரற்ற நிலப்பரப்பில் வேகமாகப் பரவிய தீயை இராணுவ வீரர்கள் உடனடியாகக் கட்டுப்படுத்தி, ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேலதிக சேதங்கள் ஏற்படாமல் தடுத்தனர்.